32
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நெல்லையப்பர்புரம் எஸ்.ஆர்.வி நகர் பகுதியில் உள்ள வெயில் உகந்த அம்மன் கோவில் அருகே நிலையூர் கால்வாய் பாசன வாய்க்காலில் தண்ணீர் கம்மாய் நிரம்பிய பிறகு கூத்தியார்குண்டு பகுதிக்கு செல்லும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இப்பாதையை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்வதாகவும், அங்குள்ள மரங்களை வெட்டுவது தீ வைப்பதாகவும், தண்ணீர் செல்லும் பாதைகளை ஆக்கிரமிப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் புகார் எழுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளும், பொதுப்பணித் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.