Home செய்திகள் நெல்லையில் தொடர் மழை எதிரொலி;வீடு இடிந்து விழுந்து ஒருவர் காயம்..

நெல்லையில் தொடர் மழை எதிரொலி;வீடு இடிந்து விழுந்து ஒருவர் காயம்..

by mohan

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தொடர் மழையினால் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் படுகாயம் அடைந்தார்.புரெவி புயல் காரணமாக தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக புயலின் தாக்கத்தினால் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள நிலப்பகுதி அனைத்தும் ஈரப்பதத்துடன் காணப்பட்டு வந்தது.இந்நிலையில் பாளையங்கோட்டை மாசிலாமணி தெருவைச் சேர்ந்த இருதயராஜ் (74) என்பவரது வீட்டின் மேற்கூரை தொடர்ந்து பெய்த சாரல் மழை காரணமாக ஈரப்பதம் ஏற்பட்டு வலுவிழந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருதயராஜ் மீது கட்டிடத்தின் மேற்கூரை விழுந்து உள்ளது. அதிக சத்தம் கேட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து இருதயராஜை இடிபாடுகளிலிருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வீடு இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் வருவாய்த் துறையினரும் ஆய்வு செய்தனர். இந்த வீட்டில் இருதயராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். பால் வாங்க இருதயராஜின் மனைவி சென்றதால் அவர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com