
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் ஊராட்சி ,ரெங்கநாதபுரம் கிராமத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடகமேடை கட்டிடத்தை எம்எல்ஏ.மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜாராம், வைரமுத்து, திமுக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, மணி, ரொக்கம், சீனியப்பன், பஞ்சித் ராஜா உப்படபலர் கலந்து கொண்டனர்.
சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.