Home செய்திகள் தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

by Abubakker Sithik

தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்; மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 04.07.2024 (நாளை) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெற வேண்டி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே.கமல் கிஷோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 04.07.2024 (நாளை) காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்ததை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், குடும்ப அட்டை-நகல், ஆதார் அடடை-நகல், வாக்காளர் அட்டை-நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com