Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் விதிமீறல்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை……….

கீழக்கரையில் விதிமீறல்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை……….

by ஆசிரியர்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2 வது அலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துவரும் நிலையில் தமிழக அரசு மே6 முதல் 20ம் தேதி வரை நண்பகல் 12 மணிவரை அத்தியாவசிய தேவைக்களுக்கும் மட்டும் பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் மார்கெட், மீன்கடை உள்ள பகுதியில் அரசு உத்தரவின் படி பகல் 12 மணிக்குமேல் விற்பனை செய்ய அனுமதியில்லை என அங்குள்ள வியாபாரிகளிடம் இது தொடர்ந்தால் அபராதம், வழக்கும் பதிவு செய்யப்படும் என எச்சரித்தார். இதயடுத்து வியாபாரிகள் கடைகளை அடைத்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com