33
இராமநாதபுரம், ஜன.7- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி என்.கரிசல்குளம், பரளச்சி துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி நாளை (08.01.24) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நீராவி, ராமசாமிபட்டி, KM கோட்டை, MM கோட்டை, கரிசல்குளம், கோரைப் பள்ளம், TC புரம், முஸ்ட்டக்குறிச்சி, முதல்நாடு, மணக்கும், ஆசூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் தாலுகா வேர்க்கோடு பீடரில் பராமரிப்பு பணி நாளை (08.01.2024) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வேர்க்கோடு, புதுரோடு, ராமகிருஷ்ணபுரம், கரையூர், MRT நகர், ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.