நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா; நினைவு பரிசுகள் வழங்கல்..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் கலை பதிப்பகம் இணைந்து பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையிலான 50 இலக்கிய கூட்டங்கள் பள்ளிக் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் வகையிலான கூட்டங்கள் என 100 கூட்டங்களை நடத்தி முடித்தனர். அந்நிகழ்வில் நிறைவு விழா இன்று நடைபெற்றது. அதன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அருங்காட்சியக வளாகத்தில் நடந்தது. கவிஞர் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். எழுத்தாளர் நாறும்பூநாதன், பேராசிரியர் ஹரிகரன், சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமை ஆசிரியர் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கி கூட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட கலைஞரின் பன்முகத்தன்மையினை எடுத்துரைத்தார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசி ஒருங்கிணைப்பாளர்களின் சிறப்பான ஒத்துழைப்பினை சுட்டிக்காட்டி பாராட்டினார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/IMG-20240617-WA0115-large.jpg?resize=1024%2C767&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/IMG-20240617-WA0114-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/06/IMG-20240617-WA0116-large.jpg?resize=1024%2C576&ssl=1)
100 கூட்டங்களும் தடங்கலின்றி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தந்த ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கணபதி சுப்பிரமணியன், கவிஞர் ஜெயபாலன், நல் நூலகர் முத்துகிருஷ்ணன், தூய தமிழ்ப் பற்றாளர் சிவ.செல்வ மாரிமுத்து, புன்னைச் செழியன், கவிஞர் முத்துசாமி, கவிஞர் சக்தி வேலாயுதம், எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம், பேராசிரியைகள் பிரியதர்ஷினி, பொன் சக்திகலா, ரம்யா, மீனாட்சிபுரம் கிளை நூலகர் அகிலன் முத்துக்குமார், மேனாள் துணை ஆட்சியர் தியாகராசன், கவிஞர். பிரபு, ச சுரேஷ் அஸ்வின், துரைராஜ் உள்ளிட்டோருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் ‘தெற்கில் உதித்த சூரியன்’ நூலோடு பயனாடையையும் எழுத்தாளர் நாறும்பூநாதன் வழங்கிச் சிறப்பித்தார். நூற்றாண்டு விழா கூட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற வழி வகுத்த அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளியும் கலை பதிப்பகத்தின் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணியும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர். ஆசிரியர் சிவ.செல்வ மாரிமுத்து அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வில் கலந்து கொண்ட மாணிக்கவாசகம், இருளப்பன் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர் ராஜேந்திரன், கவிஞர் வேதிகா ஆகியோருக்கு சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்