21
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருநெல்வேலி மாநகரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலைய பகுதியான மார்க்கெட் மற்றும் தெற்கு பஜார் பகுதிகளில் 30-03-2020 தேதியன்று, பாளையங்கோட்டை உட்கோட்ட காவல் உதவி ஆணையாளர் திரு பெரியசாமி அவர்கள் தலைமையில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தப்பட்டது.மேலும் பாதுகாப்பு கவசம் இல்லாமல் வரும் பொதுமக்களுக்கு உதவி ஆணையாளர் திரு.பெரியசாமி பாதுகாப்பு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.