Home செய்திகள் புத்தூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை முகம் சிறந்த கால்நடை வளர்ப்பு முறையைப் பின்பற்றிய விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .

புத்தூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை முகம் சிறந்த கால்நடை வளர்ப்பு முறையைப் பின்பற்றிய விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புதூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். இராஜபாளையம் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 1225 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் டாக்டர் கோவில் ராஜ் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி செய்திருந்தனர் .ஆடு .மாடு .நாய். போன்ற கால்நடைகளுக்கு கால்நடை உதவி மருத்துவர்கள்துரைமாஸ்கோ மலர் .ராமசுப்பிரமணியம் ஜெயராஜ். சுந்தர் ராஜ் ஆகியோர் கால்நடைகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினர் .மேலும் செயற்கை முறையில் கருத்தரிப்புகாக மாடுகளுக்கு கருமுட்டை வளர்ச்சி குறித்து ஸ்கேன் போன்ற கருவி வைத்து மாடுகளை பரிசோதனை செய்தனர்.இந்த முகாமில் கிடேரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மூன்று சிறந்த கிடேரிக்கன்றுகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறையை பின்பற்றும் மூன்று விவசாயிகளுக்கு சிறந்த மேலாண்மை நடைமுறை விருது வழங்கப்பட்டது இந்த விருதுகளை சட்டமன்ற உறுப்பினர் தண்ணீர் வழங்கினார்..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com