மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை.

மதுரை மாவட்டத்தில், பல ஊர்களில் பலத்த மழை பெய்தது.மதுரை அருகே திருப்பரங்குன்றம், திருநகர், பசுமலை, பழங்காநத்தம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணாநகர், கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்பநகர், கோமதிபுரம் ஆகிய பகுதிகளில், வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.திருப்பரங்குன்றம் மலையிலிருந்து, அருவி போல் மழைநீர் கொட்டியது. மதுரை நகரில் பல இடங்களில், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்