Home செய்திகள் மதுரையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியதுவெறிச்சோடிய சாலையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.

மதுரையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியதுவெறிச்சோடிய சாலையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.

by mohan

தமிழகத்தில் வீரியமுடன் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.இதனால் அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், மளிகைகடைகள் மதியம் 12 மணியுடன் அடைக்கப்பட்டு மாநகர் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வேரிச்சோடி காணப்பட்டு வருகிறது.இதனால் வழக்கமான நாட்களில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளான மேலமாசி வீதி, நேதாஜி சாலைகள் உள்ளிட்ட சாலைகள் வெரிச்சோடிக் காணப்படுவதால்,அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சாலைகளில் நண்பர்களோடு கும்பலாக கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.இதனை அவ்வழியாக அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் எச்சரிக்கை செய்தும் அவர்களை உதாசீனம் செய்தவர் தொடர்ந்து விளையாடினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com