பாஜகவின் கூலிப்படை அதிமுக – கனிமொழி பேச்சு
தேர்தல் பணிமனையை தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி திறந்து வைத்தார்
திமுக தலைமையிலான கூட்டணி எந்த சமயத்திற்கும் எதிரானது கிடையாது – வைகோ
பணமா ? குணமா ? – முடிவு செய்யுங்கள் – விளாத்திகுளம் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார்
திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் விவகாரத்தை குறிப்பிடாதது ஏன் ? ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? ஸ்டாலினை நோக்கி தமிழிசை கேள்வி ?
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி சார்பில், தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழக பா ஜ க தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று தூத்துக்குடியிலுள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்
எதிர் அணியினர் தரம்தாழ்ந்த விவாதம் செய்தாலும் நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் நேர்மறை அரசியலை எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் எங்களது நிலைபாடு
மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் தமிழகத்திற்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கும் என்பதை இன்று எங்கள் கூட்டணி நிரூபித்து வருகிறது.
தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த வைகோ பாஜக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை, இங்குள்ள மக்களுக்கு பயிர் பாதுகாப்பு திட்டம் கிடைக்கவே இல்லை என்று பல பொய்களை அடுக்கியிருக்கிறார்.
ஆனால், பயிர்பாதுகாப்பு திட்டத்தில் அதிகம் பலன் அடைந்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம்
அதுமட்டுமல்ல காங்கிரஸ் கட்சிதான் சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு வந்தார்கள். சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுத்த கட்சி பாஜக தான்
தமிழகத்தில் எதிர் கட்சியினரிடம் நாகரீகம் மிக மிக குறைந்து வருகிறது, தமிழகம் நாகரீக அரசியலுக்குள் வர வேண்டும்.
என் மீது ஒரு சின்ன களங்கம் கூட சொல்ல முடியாது, நான் வெளிப்படையான அரசியல் வாழ்க்கையை நடத்தி வருகிறேன்.
தமிழக மக்களின் வாழ்வியலில் ஒன்றான மத நம்பிக்கையை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் குறைகூறி வருவதால் மக்கள் அவர்களை புறக்கணிப்பார்கள்
திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையின் நிலைபாட்டை பற்றி குறிப்பிடவில்லையே ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் திமுக இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறார்கள் என்றார்.
*ஊழல் மற்றும் ஊழலுக்கு எதிராக நேர்மையான அரசியலை மேற்கொண்டு வருகிறோம்.
பாராளுமன்ற தகவல் படி மாநிலங்களவையிலே மிகக் குறைவான நாட்களே சென்றுள்ள மூன்று நபர்களில் ஒருவராக இருந்துள்ள எதிர் கூட்டணி வேட்பாளர் கனிமொழி எப்படி மக்களவையில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றார்.
இந்த தேர்தல் ஊழலுக்கும்- ஊழலற்ற தன்மைக்கும், நேர்மையற்ற அரசியலுக்கும்- நேர்மைக்கும் இடையே நடக்கும் போட்டியாக கருதுகிறேன் எனவே எங்களை யாரும் குறை சொல்ல முடியாது என்றார்.
என்னை ஆதரித்து தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரேமலதாவிஜயகாந்த் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.
வரும் 26ம் தேதி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வர இருக்கிறார் அன்றைய தினம் விஷன் டாக்குமேண்டரி வெளியிடப்படும், என்றார்
மேலும் கூறுகையில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக அரசகுமாரை கட்சி அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி விசைபடகு மீனவர்கள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகள் வைத்தனர்.
இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளர் ,பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரச குமார், கரு.நாகராஜ், எம்.என்.ராஜன், முரளி யாதவ், தேசிய குழு உறுப்பினர் சந்தனகுமார்,
தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலாஜி, தொகுதி பொறுப்பாளர் விஎஸ்ஆர் பிரபு, வர்த்தகஅணி சிவராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.