20
குட்டத்துப்பட்டி ஊராட்சி மயிலாப்பூரில் சுகாதாரத்துறை சார்பாக
கன்னிவாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பனியாற்றும் மோனிகா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆலிவர் தர்மராஜ் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பூங்கொடி ஜெயசீலி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினரால் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் மயிலாப்பூர், அருளானந்த நகர், பகுதியை சேர்ந்த சுமார் 250 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.மேலும்,காய்ச்சல் தலைவலி உடல்வலி சளி போன்ற பிரச்சனைகளுக்கும்வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்ட மக்களுக்கு மருத்துவக் குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மருத்துவமுகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைஊர் முக்கியஸ்தர் யாக்கோபு அவர்கள் செய்திருந்தார்.
You must be logged in to post a comment.