கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பி.எஸ் சுப்ரமணியன் – ஜெயலட்சுமி மெட்ரிகுலேசன் பள்ளியில் கீழக்கரை நகரை திறந்த கழிப்பறையற்ற நகரமாக ஆக்குவது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (13-02-2017) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சி சுகாதார அலுவலர் திண்ணாயிரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஊழியர்கள் ஹாஜா, உதயகுமார் பள்ளிக் கூடத்தின் ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.