இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு அடுத்து என்ன உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்சி உளவியல் துறை 3 ஆம் ஆண்டு மாணவி சுமையா கிராத் ஓதினார்.கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை உதவி பேராசிரியை ஏ.ராதா வரவேற்றார்.கல்வி உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பிற்கான உயர்கல்வி குறித்து தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியை எஸ்.பாத்திமா ருஸ்தா பேசினார். சென்னை சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் அல்ஹாஜ் காலித் ஏ.கே.புஹாரி வாழ்த்துரை பேசினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஆர்.கண்ணதாசன் தன்னம்பிக்கை உரை பேசினார். உயர் கல்வி குறித்து மாணவியரின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள், பேராசிரியைகள் விளக்கம் அளித்தனர். கல்லூரி மாணவியர் பேரவை தலைவி எச்.மரியம் அபிரா நன்றி கூறினார்.சீதக்காதி அறக்கட்டளை துணை மேலாளர் ஷேக் தாவூது, கல்லூரி துணை முதல்வர்கள் ரஜனி, சுலைஹா ஷகீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் கவுரி, கலைப்புல ஆணையர்கள் ஜாஸ்மின் (கலை), பண்பரசி பாத்திமா (அறிவியல்), நஜிமுதீன் ஹாஜியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Category:
மாவட்ட செய்திகள்
இறந்த முன்னோர்களை நினைவு கூறுவது கிருஸ்துவர்களின் கல்லறை திருவிழா வேலூர் மாவட்டத்தில் 20 சதவீத அளவில் கிருஸ்துவ மதத்தினர் உள்ளனர். கல்லறை களை சுத்தம் செய்து மாலை, பூ, மெழுகுவத்தி ஏற்றி வைத்து முன்னோர்களை வழிப்பட்டனர். அரக்கோணம் .வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு , வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம் Uட்டு, திருப்பத்தூர் பகுதிகளில் கல்லறை திருவிழா நடைபெற்றது.
வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டத்தில் நேற்று 1-ம் தேதி இரவு மழை பெய்ததில் காட்பாடியில் மட்டும் அதிகபட்சமாக 51 மி.மீ. மழை பதிவானது. காட்பாடிசித்தூர் பஸ் நிலையத்தில் தேங்கி நின்றது.வேலூரில் 14.9 மி.மீ மழை பதிவானது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது 3 வாகனங்கள் வாிசையாக மோதியதில் ஒரு பெண் காயம்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் இரு ஷேர் ஆட்டோ மற்றும் கார் மீது அடுத்ததாக தனியார் பேருந்து மோதி விபத்து.மேலும் ஷேர் ஆட்டோவில் பயணித்த நக்கலப்பட்டியைச் சேர்ந்த ராஜாத்தி என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த வாரம் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்கு முன் மீண்டும் ஒரு ஷேர் ஆட்டோ விபத்து உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாநகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மேஸ்திரி கெளதம் மற்றும் ஊழியர்கள் கொடுத்தனர்..
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆம்பூர் அருகே மூதாட்டி மயக்க மருந்து அடித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியான வினைய் போலீசார் கைது செய்தனர்
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொல்லம் மங்கலம் பகுதியில் ராஜம்மாள் என்ற மூதாட்டி நேற்று முன்தினம் நகை பணத்திற்காக அவரது சொந்த கொள்ளுப்பேரன் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் பேரன் மோனிஷ் மற்றும் பிரிஷ்வால் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்த நிலையில் தப்பியோடிய வினைய் என்பவரை தற்போது ஆம்பூர் கிராமிய போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும் பெண்கள் சிறைச்சாலையில் நளினியும் உள்ளனர். முருகன் அறையில் போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர். தன்னையும் கணவர் முருகனையும் விடுதலை செய்ய வேண்டி கடந்த 8 நாட்களாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் தற்போது சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மஹாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.மாநில சட்டசபையில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனிபெரும்பான்மை பெறாததால் கூட்டணி ஆட்சி அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்துவிட்டது.
இவை இரண்டும் சேர்ந்து 161 இடங்களை பெற்றுள்ளதால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகம் உள்ளதால் ஆட்சி அமைக்கலாம். ஆனால் சிவசேனாவோ தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாள் முதல் முதல்வர் பதவியில் பங்கு கேட்டு வருகிறது.அதாவது இரண்டரை ஆண்டுகள் பாஜகவும் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் ஆட்சி அமைக்க வேண்டும் என கோருகிறது. ஆனால் பாஜகவோ இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சிவசேனாவிடம் தாங்கள் அத்தகைய வாக்குறுதிகளை ஏதும் கொடுக்கவில்லை என பாஜக கூறுகிறது.மேலும் 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர் என தேவேந்திர பட்னவீஸ் கூறி வருகிறார். நவம்பர் 7-ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடும் என பாஜக கூறுகிறது. காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.அது போல் கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி வரவிடாமல் தடுத்தது போல் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்புதல் பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இதனிடையே தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில் எந்தவொரு கட்சியும் எனக்கு தீண்டதகாதவை அல்ல. பாஜக ஆளுநர் ஆட்சியை பற்றி பேசுகிறது. ஆனால் அதற்காக தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. நாங்கள் ஒரு போதும் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.எனவே சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசனை செய்ய சோனியா காந்தியை என்சிபியின் சரத் பவார் சந்தித்து பேசுவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகிறது. பாஜகவுக்கு என்சிபியும் காங்கிரஸும் ஆதரவளிக்காத நிலையில் சிவசேனா ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.அதே நேரத்தில் பாஜக ஆட்சியை விட்டு கொடுக்காமல் சிவசேனாவுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் கொடுக்க பேரம் பேசப்படலாம் என்றும் தெரிகிறது. கர்நாடகத்தில் மஜதவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டு பின்னர் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களின் அதிகார போட்டியால் அங்கு ஆட்சி கவிழ்ந்ததையும் சிவசேனா நினைவில் கொண்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறியுள்ளன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் ஆபத்தான நிலையில் இரும்பு மின் கம்பம்-மின்வாரியத்துறை கண்டுகொள்ளுமா?
by mohan
written by mohan
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் புதியதாக மாற்றியமைக்கப்படும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக தற்போது தற்காலிக பேருந்து நிலையம் நெல்லை டவுண் அரசு பொருள்காட்சி திடலில் இயங்கி வருகிறது.நெல்லை டவுண் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் பேருந்து நிலையம் உள்ளே செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் மின் கம்பத்தில் உள்ள ஒரு மின் கம்பி வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகில் தான் பேருந்துகள் சென்று வருகிறது.
ஆபத்தான இந்த கம்பியை அகற்றி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மின்வாரியத்திற்கு சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தற்காலிக பேருந்து நிலைய நுழைவாயிலில் சாலை குண்டும் குழியுமாக மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையையும் விரைந்து சீரமைக்க கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் குழந்தை பிறந்த இரண்டே வாரத்தில் தாய் உயிரிழந்த சோகம், மர்ம மரணம் குறித்து போலிசார் விசாரனை
by mohan
written by mohan
உசிலம்பட்டி அருகே குழந்தை பிறந்த இரண்டே வாரத்தில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, தாயின் மர்ம மரணம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த கார்த்திக் மனைவி தீபா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே தனுஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக கருத்தரித்த தீபா கடந்த அக்டோபர் 18ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலைத்தில் அறுவை சிகிச்சை செய்த தையல்களை பிரித்துவிட்டு வீட்டிற்கு சென்றவருக்கு நேற்று இரவு மயக்கம் வரவே தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தாகவும், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சிகிச்சையில் ஏதேனும் தவறு ஏற்பட்டு உயிரிழந்தாரா?, வேறு ஏதேனும் குறைபாட்டால் ஏற்பட்ட மரணமா? என உசிலம்பட்டி தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமீபத்தில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில் இந்த குழந்தையை மீட்க பல லட்சம் செலவு செய்தும் உயிருடன் மீட்க முடியவில்லை. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் ரூ.1000 செலவில் ஒரு அபூர்வ கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியை பயன்படுத்தி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை அரை மணி நேரத்தில் மீட்கலாம் என்று அவர் டெமோ செய்தும் காண்பித்துள்ளார்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரெங்கசாமிபுரம் என்ற பகுதியை சேர்ந்த மாணவர் முருகன் என்பவர் சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வம் உள்ளவர். சுஜித் என்ற ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானதை அடுத்து இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் செய்த முயற்சியில்தான் தற்போது இந்த புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக எளிமையாக கையாளக்கூடிய இந்த கருவியின் மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை அரை மணி நேரத்தில் வெளியே எடுத்துவிடலாம் என்றும் இதற்கான செய்முறை விளக்கத்திற்காக ஒரு குழந்தை எடையுள்ள பொம்மையை குழிக்குள் இறக்கி இந்த கருவி மூலம் அந்த பொம்மையை தூக்கி தனது கருவி தரமானது என்பதை அனைவர் முன்னிலையிலும் நிரூபித்தார். மேலும் இந்த கருவியால் 600 அடியில் குழந்தை விழுந்திருந்தாலும் மீட்கலாம் என்றும் அவர் கூறினார்.இந்த கருவியை தமிழக அரசு உரிய அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து அந்த இளைஞரை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த கருவியை எதிர்காலத்தில் மீட்புப்படையினர் பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாளை வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் எதிர்புறம் உள்ள வணிக வளாகத்தில் அரசன் பேக்கரி அமைந்துள்ள தளத்திற்கு கீழ் தளத்தில் கிப்ட் பொருள்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது.இந்த கடையில் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மின்கசிவின் காரணமாக தீப்பற்றியது. திடீரென புகை வருவதை அறிந்த கடை ஊழியா்கள் உடனே இது குறித்து அருகிலுள்ள பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் மகாலிங்க மூா்த்தி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
தீயில் கருகி கடையில் இருந்த உயர் தர வாசனை திரவிய பாட்டில்கள் வெடித்து சிதறியது. இதனால் தீ அதிகமாகி அருகிலிருந்த பூங்கொத்து விற்பனை செய்யும் கடைக்கும் பரவியது. இரு கடைகளிலும் உள்ள பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களும், பேட்டை, நான்குநேரியிலிருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு தீயினை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. எனினும் கடுமையான புகை காரணமாக உள்ளே செல்ல இயலவில்லை. கடையின் பின்புறம் உள்ள சுவரை உடைத்து உள்ளே புகுந்து தீயணைப்பு வீரா்கள் கடுமையான இரண்டு மணி நேர போராட்டத்திற்கு மத்தியில் தீயை அணைத்தனர். பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டது. உயிர்சேதம் இல்லை. மேலும் தீப்பற்றிய சிறிது நேரத்தில் பாளை அரசன் பேக்கரி தீப்பற்றி எரிவதாக சமூக வலைத்தளங்களில் தவறாக செய்தி பரவியது. ஆனால் தீப்பற்றி எரிந்தது அரசன் பேக்கரிக்கு கீழ் தளத்தில் அமைந்துள்ள பரிசு பொருட்கள் விற்கும் கடை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழப்பட்டியை சேர்ந்த மோகன்(26). இவன் 2015ல் பள்ளியில் படித்த 17 வயது மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக ‘போக்சோ’ சட்டப்படி மேலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இதன் பேரில் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் மோகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கை வெற்றிகரமாக நடத்தி சிறை தண்டனை பெற்று கொடுத்த மேலூர் மகளிர் போலீசாரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கர்நாடக மாநிலம் உருவானதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி “ராஜ்யோத்சவா” கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெங்களூரில் நடைபெற்ற ராஜ்யோத்சவா விழாவில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கலந்துகொண்டார்.அதில் அவர், “கன்னட மொழி, அழகான, வளமிக்க, நவீனத்தை உள்வாங்க கூடிய மொழி. ஆதலால் கன்னட மொழியை பயன்படுத்துவதில் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை” என கூறியுள்ளார்.மேலும் அவர், “வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்தில் குடிவந்தவர்கள் அனைவரும் கன்னட மொழியை கற்க வேண்டும், கர்நாடகாவின் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.1956-ல் மொழி வாரியாக பல மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, மைசூர் மாநிலமாக இருந்தவற்றுடன் சில கன்னட மக்கள் வாழும் சில பகுதிகளை சேர்த்து கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டது வரலாறு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மும்பை நகர சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து புகார் செய்து, 24 மணி நேரத்தில் அந்த பள்ளம் சரி செய்யப்படவில்லை என்றால் புகார்தாரருக்கு ரூ.500 வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.மும்பையில் பருவமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி புதிய சவால் ஒன்றை அறிவித்துள்ளது.இதன்படி சாலையில் 3 அங்குல ஆழம், ஒரு அடி நீளத்துக்கு மேல் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள், செயலி வாயிலாக புகார் செய்யலாம். அந்தப் பள்ளங்கள் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். இந்த காலக்கெடுவுக்குள் பள்ளம் சீரமைக்கப்படாவிட்டால் புகார்தாரருக்கு ரூ.500 வழங்கப்படும். இந்த சவால் திட்டம் வரும் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்புக்காக 3,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில், 6-ம் நாளான இன்று (சனிக்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும்.மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைகிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார். பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சுவாமி தன்னுடன் ஆட்கொள்கிறார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார்.சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர்.சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கோவிலின் முன்பு திரண்ட பக்தர்கள் கூட்டம்.சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில் கோவில் வளாகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், சுமார் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.7-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய தேசிய லீக் கட்சியின், சார்பாக மதுரை மத்தியச்சிறை முற்றுகை போராட்டம்.
by Askar
written by Askar
திண்டுக்கல் மீரான்மைதீனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய சொல்லியும் அதை மதிக்காமல் சிறைவாசி மீரானின் விடுதலையில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வரும் மத்திய சிறைத் துறை அதிகாரிகளை கண்டிக்கும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்டம் சார்பாக மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம்,மாநிலப் பொதுச்செயலாளர் மதுரை ராஜா உசேன், மாநில இளைஞரணி தலைவர் திண்டுக்கல்அல் ஆசிக், தென் மண்டல அமைப்புச் செயலாளர் முள்ளார் சையத் அலி, மற்றும் இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோலிவுட்டில் அதிகமாக பேசப்பட்டது – திருமணம். என்ற படத்தின் மூலம் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரும் கலந்து கொண்டனர். ஆனால், குறித்து வெளியில் தகவல் வெளியானால், அவரது சினிமா வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இது குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும், இருவரும் சென்னையில் வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அதிதி மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் வீட்டிலிருந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கேரளாவிற்கு சென்றுவிட்டதாகவும், அபி சரவணன் புகார் தெரிவித்தார். ஆனால், நான் அவரை காதலித்தேனே தவிர, திருமணம் செய்யவில்லை என்று அதிதி மேனன் தெரிவிக்க, தன்னிடம் இருந்த திருமணம் ஆனதற்கான ஆதாரங்களை அபி சரவணன் வெளியிட்டார்.
இதையடுத்து, அதிதி மேனன், விவாகரத்து கேட்டு மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், மனைவியுடன் சமரசம் செய்து தங்களை சேர்த்து வைத்து புதிதாக வாழ்க்கையை தொடங்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம், அதிதி மேனன் மட்டும் தொடர்ந்து கோர்ட்டுக்கு வராமல் தட்டிக் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (1/11/2019) விசாரணைக்கு வந்த அதிதியை நீதிபதி எச்சரித்துள்ளார். அதாவது, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அதிதி இல்லை இல்லை இந்த வழக்கை நான் உயர்நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதில், கோபமடைந்த நீதிபதி இது எங்களது கடமை. குடும்ப நல நீதிமன்றம் கவுன்சிலிங்கிற்கு பரிந்துரை செய்யும். கண்டிப்பாக சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கரூரில் தமிழ்நாடு தின விழா கொண்டாட்டம். தமிழறிஞர்கள் மற்றும் திருக்குறள் பேரவை கொண்டாடியது !
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது.
இந்த மாநிலம் உருவாகி 63 வருடங்களாகியும், தற்போது 64 வது வருடம் தமிழ்நாடு தினமாக பிறக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சிறப்பாக தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சங்ககாலப்புலவர்கள் நினைவுத்தூணின் முன்பு கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டாடினர்.
மேலும், கவிதைப்போட்டிகளையும் கரூர் திருக்குறள் பேரவை நடத்தியது. தமிழ்நாடு தினத்தினை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்றும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்றதோடு, அதற்காக மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், தமிழில் பெயர் வைக்க நிறுவனங்கள் முன்வரவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி நகரமே வெறிச்சோடியது.
சாலைகளில் மரங்கள் சாய்ந்ததாலும், மண்சரிவாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்பட்டி ஊராட்சி பகுதியில் பள்ளங்கியிலிருந்து கோம்பை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் கனமழையின் காரணமாக அடித்து செல்லப்பட்டது.
இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு பாலம் உடைந்தது. இதன்காரணமாக கோம்பை பகுதி மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அவர்கள் தங்களது ஊரிலிருந்து கொடைக்கானல் வில்பட்டி மற்றும் வெளியூர்களுக்குச் செல்ல, குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல இந்த பாலத்தையே பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்கு உரிய மாற்றுப்பாதை கிடையாது.
கோம்பை பகுதியானது முழுவதும் விவசாயம் சார்ந்த கிராமமாகும். இங்கு உருளை,கேரட்,பீன்ஸ் போன்ற பல்வேறு வகையான பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அறுவடை செய்யும் இப்பயிர்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.