கீழக்கரையில் உள்ள தெற்கு தெரு பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கீழக்கரையில் உள்ள தெற்கு தெரு பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அப்துல் ரகுமான் ,(பிறப்பு: நவம்பர் 9, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
உலகம் முழுவதும் மே 31ம் தேதி புகையிலை எதிர்ப்பு தினமான கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை ஒட்டி கீழக்கரை நகராட்சி சார்பாக புகையிலையின் தீமையை விளக்கி விழிப்புணர்வு ஏற்பாடு செய்யபட்டது.
இப்பேரணி கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில் மற்றும் அனைத்து நகராட்சி அலுவலர்களின் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.
இப்பேரணியில் புகையிலையின் தீமையை விளக்கும் வண்ணம் பதாககைகளை ஏந்தியபடி கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் தொடங்கி அனைத்து தெருக்களிலும் நகராட்சி ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். “புகையிலை இல்லா குடும்பம் நலமான குடும்பம் ” “புகையிலை ஒரு உயிர்கொல்லி நோய்” “புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்” “புகையிலையை ஒழிப்போம் உயிரை காப்போம்” என்ற வாசகங்கள் பொருத்திய பதாகைகள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிகழ்வை நகராட்சி துப்பரவு பணி ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி ஒருங்கிணைப்பில் நகராட்சி ஊழியர்கள் சிறப்பாக செய்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை தொடாந்து நிகழ்த்துவது மூலம் மக்கள் மத்தியில் தீய செயல்கள் பற்றிய நல்ல விழிப்புணர்வு ஏற்படும்.
ஆனால் தீமை என்ற பொருளை அறிந்தும் விற்பனை செய்வதும் அதை வருமானத்திற்காக ஊக்கப்படுத்தும் அரசாங்கமும் சிந்தித்தால் இதற்கு நிலையான தீர்வு ஏற்படும்.
கீழக்கரை நகராட்சியில் இன்று (31-05-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை திடக்கழிவு மேலான்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2016ன் படி அத்திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி கீழக்கரையில் உள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குப்பைகளை பிரித்தளித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விதிமுறைகள் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டம் கீழக்கரை ஆணையர் M.R.வசந்தி தலைமையிலும், தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையிலும், வர்த்தக சங்க செயலர் ரோட்டரி சுப்பிரமணியன் அவர்களால் தொடங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திடக்கழிவு விதிகள் பற்றியும், நகரின் தூய்மையை பேண பொதுமக்கள் ப்ளாஸ்டிக் ஒழித்தல் மற்றும் குப்பைகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்ற வழிமுறைகளும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தை நகராட்சியின் துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
உத்தரபிரதேஷ், மீரட் நகரைச் சார்ந்த 25 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் லக்னோ – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரயில் பாதுகாப்பு பணியில் இருந்த கமல் சுக்லா (24 வயது) காவல் துறையைச் சார்ந்தவன் பயணம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து மானபங்கபடுத்தியுள்ளான். இச்சம்பவத்தின, பொழுது அந்த முஸ்லிம் பெண் நோன்பு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனே பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் எஸ்கார்ட் கான்ஸ்டபிள் கமல் சுக்லா கைது செய்யபப்ட்டுள்ளான்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி கேசவ் குமார் சவுத்ரி தெரிவிக்கையில்:
“பாதிக்கப்பட்ட பெண் சாதாரண ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ரமழான் நோன்பு வைத்திருந்தால் சாதாரண பெட்டியில் பயணம் செய்வது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால் ஆதலால் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணிக்க முயற்சித்துள்ளார். இதனை கவனித்த கமல் சுக்லா அவருக்கு உதவுவதாக கூறி சந்தப்பூர் ரெயில்வே ஸ்டேஷன் வந்ததும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிலரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். பிறகு அந்த ரயில் பெட்டியின் கதவை பூட்டிவிட்டு அந்த பெண்ணை கழிவறையில் வைத்து வன்புணர்வு செய்துள்ளார். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.உடனே பயணிகள் கான்ஸ்டபிளை பிடித்து ரெயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்”என்று அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேச முதல்வராக பதவியேற்றது முதல் இது போன்ற பாலியல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் மீது பாஸிச பயங்கரவாதிகள் குறி வைத்து தாக்குவது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் சாராயக்கடையை அடைக்க கோரி பல இடங்களில் போராட்டங்களும், அதே போராட்டங்கள் மூலம் பல இடங்களில் கடைகள் சூறையாடப்படும் அளவுக்கு சென்றது. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் தமிழக அரசாங்கம் மூடப்பட்ட கடைகளை மற்ற பிற இடங்களில் திறப்பதற்கான முயற்சியிலேயே இருந்து வந்தது.
இதைத் தொடர்ந்து கீழக்கரையில் சில நாட்களுக்கு முன்னர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள மதுக்கடைகளை நாம்தமிழர் கட்சியினர் முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்தார்கள். இதையடுத்து கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் நாம்தமிழர் கட்சியினர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் டி.எஸ்.பி தற்பொழுது போராட்டம் நடத்த வேண்டாம், அதிகாரிகளை விரைவில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து 30-05-2017 அன்று கீழக்கரை தாலுகா அலவலகத்தில் டி.எஸ்.பி, தாசில்தார் இளங்கோவன், மதுவிலக்கு ஆயத்தீர்வை உதவி ஆணையர் அமிர்தலிங்கம், டாஸ்மாக் மேலாளர் வடமலை முத்து, கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி மற்றும் நாம்தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ராஜு, நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோகுல நகர் மகளிர் மன்ற பெண்கள் ஆவேசமாக அப்பகுதியில் இருக்கும் மதுக்கடையில் ஆண்கள் குடித்து விட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் படும் அவஸ்தையை ஆவேசமாக எடுத்துரைத்தார்கள். அதற்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை உதவி ஆணையர் அமிர்தலிங்கம் கடையை உடனடியாக அடைப்பது சாத்தியமில்லை,அரசு அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்க குறந்தது ஆறு மாதம் ஆகும் என்றார், ஆனால் அதற்கு மகளிர் அணியிடம் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் பொதுத்தளம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், வடக்குத் தெரு சமூக அறக்கட்டளை (NASA TRUST) போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் ஆம்புலனஸ் மற்றும் அதன் சார்ந்த வசதிகளை செய்ய பல முனையில் நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.
இன்று (30-05-2017) இப்பணியிணை ஊக்குவிக்கும் வண்ணம் கீழக்கரையைச் சார்ந்த வள்ளல் சீதக்காதி புரமோட்டர்ஸ் நிறுவனம், ஆம்புலன்ஸ் சேவைக்காக நிதி திரட்டும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், இந்நிறுவனத்தின் செயல்பாடு சமூக அக்கறையை வெளிபடுத்தியுள்ளது. இது மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சமூக அக்கறை மீது ஒரு ஈடுபாட்டை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் இந்நிறுவனம் இன்னும் பல சமூக சேவைகள் செய்ய வாழ்த்துகிறது.
அமீரகத்தில் இயங்கி வரும் பணம் பரிமாற்றம் (Money Exchange) செய்யும் ஒரு நிறுவனம் எந்த வித முன் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் அதன் மூலம் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பிய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் 2 கிளைகளும், துபாயில் 3 மூன்று கிளைகளும், சார்ஜாவில் 1 கிளையும் மொத்தம் ஆறு கிளைகள் இயங்கி வந்தது.பெயர் குறிப்பிடப்படாத அந்த பணப் பரிமாற்றம் (Money Exchange) செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் பல லட்சம் மதிப்புள்ள திர்ஹம் மோசடி செய்து அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டதாக ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த எக்ஸ்சேஞ்சின் மூலம் தாயகத்திற்கு அனுப்பிய சேமிப்பு பணம் கஷ்டப்பட்டு ஈட்டியது என்றும் அந்த பணத்தை ஒரே இரவில் இழந்துவிட்டோமே என்று நினைக்கும் போது மிகுந்த வேதனை அளிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறினார்கள். இது குறித்து அபுதாபி நீதி மன்றத்தில் புகார் கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அமீரகத்தில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியினால் தனி நபரின் தொகை 1000 திர்ஹம் முதல் 45000 திர்ஹம் வரை ஏமாற்றப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் தெரிவித்துள்ளார்கள்
சேலத்தை சார்ந்த முருகன் என்பவர் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைக்க அனுப்பிய பணம் 3 நாட்கள் ஆகியும் போய் சேரவில்லை என்பதை அறிந்து அவர் எக்ஸ்சேஞ்சை தொடர்பு கொள்ளும் போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதாகிவிட்டது என்று ஊழியர் தொரிவிதுள்ளார், பின்னர் தான் அனுப்பிய பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த அவர் மனம் உடைந்து போயுள்ளார்.
அமீரகம் முழுவதும் வைரலாக பரவிய செய்தி மோசடி செய்தி அமீரகத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்கிய உள்ளூர் அரபிக்கும் எட்டியது. அவரும் உடனே அவர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு உரிமையாளரின் கடவு சீட்டை ( passport) முடக்க அனைத்து முயற்சியும் எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய வங்கிக்கு அந்த ஸ்பான்சர் புகார் கொடுத்தாகவும், பண மோசடிக்கு விரைவில் தீர்வு எட்டபட்டு வாடிக்கையாளரின் பணத்தை திரும்ப செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்…
கடந்த பல வருடங்களாக விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் உண்ணும் உணவு முதல் குடிக்கும் நீர் வரை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை இந்திய சந்தையில் இந்திய பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தினர். உதாரணமாக சூர்யக்காந்தி எண்ணை, ஓட்ஸ், நூடுல்ஸ் போன்ற இந்திய நாட்டிற்கு பழக்கமே இல்லாத உணவுகளை கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் சந்தைபடுத்தி ஓரளவு மக்களை அவ்வுணவு பழக்கத்திற்கு அடிமையும் படுத்தினர். ஆனால் போலி சாயம் கடந்த சில வருடமாக இயற்கை உணவு விழிப்புணர்வு அடைந்த பொழுது வெளுக்கத் தொடங்கிவிட்டது.
சமீப காலமாக மீண்டும் மக்கள் மூதாதையார்களின் இயற்கை உணவின் பக்கம் திரும்பிய வண்ணம் உள்ளனர். அதனின் அசூர வளர்ச்சி சமீப காலத்தில் Organic Store என்ற பெயரில் பல இடங்களில் முளைத்து இருக்கும் இயற்கை காய்கறி மற்றும் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள், ஆனால் அதிலும் வியாபார நோக்குடன் கலப்படம் செய்து விற்பனை செய்வதுதான் மிகவும் வேதனையான விசயம்.
இந்த போலியான வியாபாரிகளிடம் இருந்து காக்கும் வண்ணம், மக்களுக்கு தரமான சமயல் எண்ணை வழங்க வேண்டும் எற்ற நோக்கத்தில் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த அபுதாஹிர் மற்றும் சலீம் ஆகியோர் இயற்கை முறையில் செக்கு மூலம் தயாரிக்கப்படும் நல்லெண்ணை, கடலை எண்ணை மற்றும் தேங்காய் எண்ணை ஆகியவற்றை சந்தைப்படுத்தும் நோக்கத்தோடு SMB மரச் செக்கு எண்ணை என்ற பெயரில் வரும் 02-06-2017 முதல் கீழக்கரையில் சந்தைப்படுத்த உள்ளார்கள்.
இவ்வகை எண்ணை பாரம்பரிய முறைப்படி செக்கு மற்றும் உலக்கை இரண்டும், வாகை மரத்தினால் செய்யப்பட்டு மிகக் குறைந்த வேகத்தில் சுழன்று உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் வைட்டமின்களும் அழியாமல் சுகாதாரமான முறையில் கருப்பட்டி கலந்துஉற்பத்தி செய்வதே மரச்செக்கு எண்ணையின் சிறப்பாகும். அறிமுகமாக விலையாக மரச்செக்கு நல்லெண்ணெய் விலை கீழ்கண்டவாறு அறிவித்துள்ளார்கள்.
Opening Offer
1 Ltr. Bottle – RS 300.00 Offer 100ml Free
1/2 Ltr. Bottle – RS 155.00 Offer 50ml Free
இந்த புதிய வியாபாரம் எல்லா வளங்களையும் பெற்று சிறக்க கீழை நியூஸ் வோர்ல்ட் நிர்வாகம் வாழ்த்துகிறது.
புனித மிக்க ரமலான் மாதத்தில் சக்தியுள்ள அனைவரும் நோன்பு வைக்க கடமைப்பட்டவர்கள். அதே சமயம் அனைத்து நோன்புகளையும் இறைவனின் பொருத்தத்தை வேண்டி வைக்க மனம் இருந்தாலும், முறையான உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழை எளியோர்களும் உள்ளனர்.
மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வண்ணம் கீழக்கரை தெற்குத் தெருவச் சார்ந்தவர்கள் ஜமாஅத் ஒத்துழைப்புடன் தினம் 220 தேவையுடைய நபர்களுக்கு சஹர் உணவு தயார் செய்து வழங்குகிறார்கள். இது பற்றி தெற்குத் தெருவைச் சார்ந்த நபர் ஒருவர் கூறுகையில், சஹர் உணவு தினமும் சாயங்காலம் முதல் தயார்படுத்த தொடங்கி இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் தேவையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை திறமே செய்து முடிக்க இளைஞர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து செயல்படுகிறார்கள். இந்தப் பணியை தினமும் சரியான நேரத்திற்குள் தேவையுடையவர்களின் இல்லங்களுக்கே சென்று கொடுக்கப்படுகிறது. இதற்கான செலவினங்களை சுமார் 30 பேர் 15 ஆயிரம் வீதம் பங்கிட்டு இப்பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார்.
இப்பணி இன்னும் சிறப்பாக அமைய கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இது போன்ற சமூக சேவை செய்திகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 00966500818177 என்ற WhatsApp எண்ணுக்கு புகைப்படத்துடன் அனுப்பலாம்.
பிரேசில் நாட்டை சார்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் திலப்பியா என்ற கெண்டை மீன்களின் தோலை பயன்படுத்தி தீ காயங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக தீயினால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மனிதர்களின் தோல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் பிரேசில் நாட்டில் திலப்பியா (Tilapia) என்ற கெண்டை மீனின் தோலை எடுத்து அதை சிகிச்சைக்கு பயன்படுத்துவது பரவலாக கணப்படுகிறது.
ஆற்றில் வளரக்கூடிய கெண்டை மீன் வகைகள் பிரேசில் நாட்டில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மருத்துவ குணம் நிறைந்த அந்த மீன்களின் தோலில் ஈரப்பதமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த புதிய வகையான சிகிச்சை மூலம் வலி குறைந்து விரைவில் குணமடையும், திலாபியா மீனின் தோல் இவ்வகையான சிகிச்சைக்கு ஏதுவாக அமைகிறது. தீக்காயத்துக்காக செய்யப்படும் மற்ற சிகிச்சையின் செலவோடு ஒப்பிடும் போது சாதாரண முறையில் செய்யப்படும் செலவை காட்டிலும் 75% குறைவாகவே மதிப்படப்படுகிறது..
தற்போதய நவீன காலகட்டத்தில் தீ காயங்களுக்கு நிவாரணியாக திலாபியா மீன் தோல் மூலம் செய்யப்படும் புதிய வகையான சிகிச்சை முறை என்பது மருத்து உலகின் மற்றும் ஓர் மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று (28/05/2017) கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மீது தனியார் வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த மூன்று மாணவிகள் மற்றும் இரு வாகனத்தின் ஓட்டுனர்களும் காயம் அடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். மேலும் இச்சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புனித மாதமான ரமலான் மாதம் நேற்று முதல் தமிழகமெங்கும் ஆரம்பம் ஆகியுள்ளது. இந்த புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர தொழுகையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் அன்றாட தேவைகளுக்காக பொருட்களை வாங்க கடைத் தெருவுக்கு செல்வார்கள். ஆனால் இந்த வருடம் காவல் துறையினரின் கெடுபிடியால் சாதாரண நாட்களைப் போல இரவில் 11.00 மணிக்குள் கடைகள் அடைக்கப் பட்டு விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
இதுபற்றி கீழக்கரை தெற்கு தெரு ஜமாத்தை சார்ந்தவர் கூறுகையில், கடந்த வருடங்களில் காவல்துறையினர் நோன்பு காலங்களை கவனத்தில் கொண்டு வியாபாரிகளிடம் இணக்கமாக கூடுதல் நேரம் வியாபார தலங்களை திறந்து வைக்க அனுமதிப்பார்கள், ஆனால் இந்த வருடம் அதிக கெடுபிடியால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். இப்பிரச்சினையை ஜமாத்தார்களும், சமூக நல அமைப்புகளும் ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள நாகாச்சி கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கும் கடற்கரை அருகில் உள்ள மீனவ குடியிருப்பான அழகத்தாவலசை கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் அழகத்தாவலசையை சேர்ந்த நாகராஜ், லட்சுமனன் ஆகியோரை மற்றொரு பிரிவினர் உச்சிப்புளி மார்க்கெட்டில் வைத்து வெட்டியுள்ளனர்
இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் லட்சுமனன் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமணையில் அனுமதிக்கந்நட்டுள்ளார். காவல்துறையினர் விசாரனை நடத்தி பதட்டத்தை தனிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்று கீழக்கரையில் முதல் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கி விட்டது. நோன்பை எந்த அளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போமோ அதுபோல் கீழக்கரை பள்ளி வாசல்களில் அசர் நேரத் தொழுகைக்குப் பிறகு ஊற்றப்படும் நோன்பு கஞ்சிக்கு காத்திருக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த நோன்பு கஞ்சி பெரியவர் முதல் சிறியவர் வரை, செல்வந்தர் முதல் வறியவர்கள் வரை எந்த பாகுபாடின்றி வாங்கி செல்லும் காட்சியை நோன்பு காலங்களில் காண முடியும். பள்ளிகளில் ஊற்றப்படும் கஞ்சிக்கு நிகர் எதுவும் கிடையாது.
இன்று முதல் கீழக்கரையில் அனேக பள்ளிகளில் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடங்கி விட்டது, இது கடைசி நோன்பு வரை கிடைக்கும், அதற்கு பின்னர் இந்த சுவையான நோன்பு கஞ்சிக்கு அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
வடக்குத் தெருவில் கஞ்சி வாங்கி செல்லும் காட்சி:-
தெற்கு தெருவில் கஞ்சி வாங்கி செல்லும் காட்சி:-
சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. எந்த ஒரு தேர்வுக்கும் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல் பல மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்றுள்ளார்கள். இன்னும் சில மாணவச் செல்வங்களோ அடுத்த நிலைக்கு செல்வதற்கு குறுகிய கால அவகாசம் எடுத்துள்ளர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் என்பதை விட அடுத்த நிலையை அடைய சீரிய திட்டம் தீட்டக் கூடியவர்கள் என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமான விசயம் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் வாழ்கையில் வெற்றி பெற்றவர்கள் இல்லை, அதே போல் மிக சாதாரண மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எல்லாம் வாழ்கையில் தோல்வி பெற்றவர்களும் கிடையாது. ஆனால் இந்த இரு வகையான மாணவச் செல்வங்களும் வாழ்கையை கையாளும் முறையை வேறு விதங்களில் எடுத்துள்ளார்கள்.
சமீபத்தில் இந்துஸ்தான் பத்திரிக்கை பரிட்சை முடிவுகள் வெளிவரும் நாட்களில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் மனநிலையைப் பற்றி குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் மனோதத்துவ மருத்துவர்கள் கூறுவதாக சொல்லப்பட்டிருந்த இரண்டு விசயம் மிகவும் அதிர்ச்சியைத் தரக் கூடியதாக உள்ளது. முதல் விசயம் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கூட மனதில் கொள்ளாமல் குழந்தைகளை சிறந்த கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்கிறார்கள் என்கிறது. இரண்டாவதாக கூறப்பட்டுள்ள கருத்து மிகவும் வேதனையளிக்க கூடியதாகவும் தீர சிந்திக்க கூடியதாக உள்ளது. அதாவது அதிகபட்சமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமை கொள்வதற்காகவே பிள்ளைகள் மேல் அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள் என்கிறது. இதனுடைய விளைவு பிள்ளைகளுக்கு படிப்பின் மீதே ஒரு வெறுப்பை உண்டாக்கி பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.
இன்று நாம் நடைமுறையிலேயே பிள்ளைகள் பரிட்சை முடிவுகளை கூறியவுடனே கேட்பவர்கள் கேட்கும் உடனடி கேள்வி எத்தனை மதிப்பெண் ? என்பதுதான். சில பெற்றோர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்த பிள்ளைகளின் மனதை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக மறைத்தாலும் சில பேர் அந்த நோக்கத்தை புரியாமல் கூடுதல் மதிப்பெண் எடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் வேதனைக்குரியது. இது மிகைப்படுத்துதல் அல்ல, பரிட்சை முடிவுகள் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்பு மாணவர்கள் டிவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் அவர்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்த காட்சிகளே சாட்சி…
ஒரு மாணவன் தன் சொந்தங்களுக்கு மதிப்பெண் முக்கியமில்லை என்பதை விளக்குவதாக…
மற்றொரு மாணவன் பரிட்சை முடிவுகள் வரும்பொழுது சொந்தங்களின் முகபாவனையை..
இன்னும் சில கீழே…
இன்று சவுதி அரேபியா மற்றும் அனேக மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நோன்பு தொடங்கியது. முதல் நோன்பான இன்று சவுதி அரேபியா ஜித்தாவில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் கீழக்கரை சகோதரர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த நட்பு வட்டாரங்களுக்கான இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆர்யாஸ் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமான கீழக்கரை மற்றும் அப்பகுதி சார்ந்த மக்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சி எல்லா தரப்பு மக்களையும் ஒரே இடத்தில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருந்தது என்று கலந்து கொண்ட சகோதரர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வை கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த மூனானா என்று அழைக்கப்படும் சீனி அலி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
இஸ்லாமிய சமுதாயத்தின் புனிதமிக்க மாதம் ரமலான் மாதம். பாவங்கள் மன்னிக்கப்படக் கூடிய மாதம். தான தர்மங்கள் வாரி வழங்கப்படும் மாதம் இந்தப் புனித ரமலான் மாதம்.
கீழக்கரையில் இந்த புனித மாதம் ஆரம்ப நாட்களில் பெண்கள் சொந்த, பந்தங்களின் வீடுகளுக்கு சென்று முகமன்களை பரிமாறிக் கொள்வார்கள். அனேக குடும்பத்தினர் இந்த புனித மாதத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக உண்டாக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.
இந்த ரமலான் மாதம் முழுவதுமே தொழுகை பள்ளி வாசல்களும், கடைத் தெருக்களும் விழாக் கோலம் பூண்டு இருக்கும். இத்தருணத்தில் கீழை நியூஸ் வோர்ல்ட் நிர்வாகமும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் இந்த வருடம் கடுமையான வெப்பத்தை முன்னிட்டு தமிழக அரசின் அறிவிப்பின் படி ஒரு வாரம் காலம் தாமதமாக ஜூன் மாதம் 07ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.
இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதமும் இன்று (27-05-2017) இரவு முதல் தமிழகத்தில் தொடங்குகிறது. இன்று தொடங்கி ஒரு மாதம் காலம் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்களின் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் ரமலான் மாதத்தில் பள்ளி வேலை நேரத்தை கீழக்கரை இஸ்லாமியா பள்ளி நிர்வாகம் காலை 09.15 முதல் பகல் 01.00 மணி வரை குறைத்து மாற்றியமைத்துள்ளார்கள். மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு சலுகை வழங்குவதிலும் முன்னோடியாகத்தான் உள்ளார்கள்.
வட கிழக்கு மாநிலமான மேகாலாயாவின் குகையில் வாழும் புதிய வகை நண்டு இனத்தை இளம் விஞ்ஞானி ஒருவர் இந்தியாவிலேயே முதல் முறையாக கண்டறிந்துள்ளார்.
இமய மலையை தழுவியிருக்கும் மேகாலயா பற்றி சொல்லும் போது அதன் வசீகரத்தன்மை கொண்ட அழகு நிறந்த அடர்த்தியான காடுகள் மற்றும் நீர் நிலைகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
உலகில் மொத்தம் 34 பகுதிகள் பல்லுயிர்களின் வாழ்விடமாக கருதப்படுகிறது. அதில் இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் மேகாலயாவும் பல்லுயிர்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
உலகிலேயே மிக நீளமான இயற்கையாக அமைந்துள்ள குகைகளை கொண்ட பெருமையை மேகாலயா மாநிலம் பெற்றுள்ளது என்பதை அறிந்தவர்கள் குறைவுதான். அந்த குகையில் தான் சிறிய அளவிளான அரிய வகை உயிரினத்தை 29 வயது நிரம்பிய பர்வீன் பர்ஸானா அப்சர் என்பவர் கண்டு பிடித்துள்ளார்.
அந்த பெண்மணி விலங்கு அறிவியல் (Wild life Science) பற்றிய கல்வியை அலிகர் முஸ்லிம் யுனிவர்சிட்டியில் பயின்று வருவதோடு மலை குகையின் உயிரியல் தொடர்பான ஆராய்ச்சி ஒன்றையும் கிழக்கு ஜெய்ந்தியா மலையில் செய்து வருகிறார்.
குகை பற்றி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருக்கும் போது அந்த பெண்மணி வெளிறிய நிறத்தில், பார்வையற்ற சிறிய வகை நண்டு ஒன்றை 2 சென்டிமீட்டர் நீளத்தில் முதன் முதலில் கண்டறிந்தார்.
அந்த புதிய வகை உயிரினம் இருள் சூழ்ந்த குகையில் வாழும் தன்மையுடைய அனேகமாக குருடாகவும், வேறு வகையான நண்டு இனத்தை போன்று அல்லாமல் வெளிறிய நிறத்திலும், கால்கள் மெல்லியதாகவும் அதில் முடிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆராய்ச்சியை பற்றி பெண் விஞ்ஞானி கூறுகையில், நிளமான குகையின் முகப்பிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அரிய வகை உயிரினத்தை நான் பார்த்த பிறகு அதை பற்றி தொடர் ஆய்விற்காக வெளியே சென்றேன். அப்போது பளப்பளப்பாக இருந்த உயிரினத்தை கண்டு வியந்த நான்,அதை எடுத்து பார்த்து உடன் அது புதிய வகையான நண்டு இனம் என்பதை உறுதி செய்தேன். அதில் பெண், ஆண் மற்றும் அதனுடைய குட்டியும் இருந்தது. பொதுவாக ஆண் இனத்தை காண்பது அரிது, அது பெரிய விசயமாகவும் நினைத்தேன். என்னுடைய 11 வருட ஆராய்ச்சியில் இது போன்ற நண்டு இனத்தை கண்டதில்லை என்று பெருமிதம் அடைந்தார்.
உடனே அந்த உயிரினத்தை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்த பர்வின் பர்ஸான கொல்கத்தாவில் உள்ள விலங்கியல் கணக்கெடுப்பு Zoology Survey) மையத்துக்கு உயிரினத்தின் மாதிரியை அனுப்பி வைத்தார். இரண்டே நாட்களில் அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அது ஜீனஸ் டெரிடமோன் (Genus Teretamom) வகையை சார்ந்த புதிய வகை உயிரினம் என்று உறுதி செய்தனர்.
புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினத்துக்கு பெயர் வைக்க சொல்லி பெண் விஞ்ஞானியை ஆராய்ச்சியாளர்கள் கேட்டு கொண்டதால் தன் குடும்பத்துக்கு நன்றி சொல்லும் விதமாக டெரிடமோன் அப்சர்சும் (Teretamom Absarsum) என்று பெயர் சூட்டவும் அவர் எண்ணியுள்ளார்..
You must be logged in to post a comment.