சுகாதார நிலையம் பூமி பூஜை போட வந்த மதுரை மேயர் காரை மறித்த வி.சி நிர்வாகிகள்.கழிவறை வசதி செய்து தராமல் சுகாதார மையம் அமைக்க கூடாது.திருப்பரங்குன்றம் அருகே துர்கா காலனி பகுதியில் ரூபாய்25 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது மதுரை மாநகரட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த். மண்டல தலைவர் சுவிதா விமல் ஆகியோர் கலந்துகொண்டனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மாநகராட்சி 97வது வார்டு துர்கா காலனி பகுதியில் மதுரை மேயர் இந்து ராணி பொன்வசந்த். மண்டல தலைவர் ஸ்வேதா விமல் 97 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ் மற்றும் மாநகாட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தேசிய நகர் புற புரைமைப்பு திட்டத்தின் கீழ் சுகாதார நல மையம் பூமி பூஜை நடைபெற்றது.97வது வார்டு துர்கா காலனியில் 25 லட்சம் ரூபாய் செலவில் பூமி பூஜை நடைபெற்றது.நீ பூஜை நடைபெறும் பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தம் காரை மறித்தனர் தங்கள் பகுதியில் கழிவறை வசதிகள் இல் சீர் செய்து தந்த பின்தான் மருத்துவமனைக்கு கட்ட வேண்டும் இல்லையேல் மருத்துவமனையை வந்து செயல்பட அனுமதிக்க மாட்டோம் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.