மதுரையில், மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் . ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்தனர்.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி 4வது மண்டலத்தின் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனு முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பாதாளசாக்கடை, சாலை வசதி, குடிநீர் தொடர்பான மனுக்களை வழங்கினர்.பொதுமக்களோடு சேர்ந்த கவுன்சிலர்களும் வருகை தந்து பணியாளர்கள் அதிகரிப்பு, வார்டு தேவைகள் தொடர்பாகவும் மனுக்களை அளித்து வருகின்றனர். தொடர்ந்து, மதுரை மாநகராட்சிக்கு மண்டலத்திற்கு 4 உட்பட்ட வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு குறித்து ஏராளமான பொதுமக்கள் மக்களாக மற்றும் மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மதுரை மேயர் மற்றும் துணை மேயரிடம் மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா ஆகியோர் அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..