Home செய்திகள் மதுரையில் பிரபல வணிக வளாகத்தில் பணம் செல்போன் திருடிய நபர் கைது.

மதுரையில் பிரபல வணிக வளாகத்தில் பணம் செல்போன் திருடிய நபர் கைது.

by mohan

மதுரை அண்ணா நகர் செண்பகத் தோட்டம் நியூ எச்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவர் தல்லாகுளத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் வைத்திருந்த ரூபாய் 2500, 2 செல்போனகள் திருடு போய்விட்டது. இது தொடர்பாக அவர் தல்லாகுளம் போீலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் செல்போன் திருடிய நபரை அடையாளம் தெரிந்தது. அவர் பீ.பீ.குளத்தைச்சேர்ந்த தியாகராஜன் 40 என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!