மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே கிளாட்வே சிட்டியில் குடியிருப்பவர் ஜெய ரட்சகன். இவரது மகள் ஜெர்லின் அனிகா (வயது 17)மதுரை மாநகராட்சி பள்ளியில் படித்து வரும் இவர் பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார் பேட்மிட்டன் பிரிவில் குழுக்கள் பிரிவிலும் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு தனிநபர் சுற்று ஆகிய மூன்று பிரிவுகளிலும் இறுதிப் போட்டியில் வென்று 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்சென்னையில் இருந்து ரயில் மூலம் அந்த திருவிழாவிற்கு மதுரை ரயில் நிலையத்தில் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் நண்பர்கள் பள்ளித் தோழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் இது குறித்து அவரது தந்தை கூறுகையில் அனிகாவிற்கு சிறுவயது முதலே பேட்மிட்டன் போட்டியில் ஆர்வம் இருந்ததால் அதனைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தும் விதமாக பயிற்சி அளித்தும் அவரது பயிற்சியாளர் சிறந்த பயிற்சி அளித்தார் இதனைத் தொடர்ந்து இன்று ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் அளவுக்கு சாதனை புரிந்துள்ளார் அனைத்து தரப்பினரும் உதவி செய்துள்ளனர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.