மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன் இவர் இன்று மதியம் இரு சக்கர வாகனத்தில் பெத்தானியாபுரம் பகுதியிலிருந்து பழங்காநத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்பொழுது பைபாஸ் ரோடு பகுதியில் தவறான பாதையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது இருசக்கர வாகனத்தில் பயணித்த கோபால் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயங்களுடன் துடிதுடித்துள்ளார் விபத்தை பார்த்த அந்த வாழியாக சென்ற நபர் ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்காமல் இரு கைகளால் தூக்கி சென்று காப்பாற்ற முயன்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடிராக்டர் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார் தகவலறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் டிராக்டர் உரிமையாளர் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டிய டிராக்டரை வியாபார நோக்கத்துடன் பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.