12
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70வது வார்டு பைபாஸ் சாலை வானமாமலை நகர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது இது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடமானது பலமுறை நோட்டீஸ் கொடுத்து காலி செய்யாததால் இன்று அதிரடியாக மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அங்குள்ள பொருட்களை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர் மாநகராட்சி அதிகாரி கூறுகையில் இந்த இடத்தில் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்ட உள்ளதாகவும் இவரிடம் பலமுறை நோட்டீஸ் கொடுத்து இவர் காலி செய்ய மறுத்ததால் இன்று அதிரடியாக ஆக்கிரமிப்பு அகற்றினோம் என தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.