7
வேலூர் மாவட்டம் வேலூர் வேலப்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி குமரவேல் (60). நேற்று இரவு குடித்துவிட்டு மனைவி கோமதியிடம் (48) தகராறில் ஈடுப்பட்டுள்ளார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோமதி, கணவனை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மனைவி வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.