தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளிக்கு நேரில் சென்று மாணவ மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புளியங்குடி பள்ளியில் காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர், சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் ONE STOP CENTRE ஆகியோர் இணைந்து புளியங்குடி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் 1098,181,14417,1930 ஆகிய தொடர்பு எண்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.