12
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நூத்துலாபுரம் ஊராட்சியில் சீத்தா புரத்தில் உள்ள வீடுகள் தோறும் இந்திய நாட்டின் பிரதமர் மோடியின் சிறப்பு திட்டமான வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊராட்சி ஒன்றிய 15வது நிதிக்குழு மானியக் திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பூமி பூஜை விழா நூத்துலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.