10
மதுரை மேலமடை மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில், முறைகேடுகள் நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த அலுவலகத்தில், மின் இணைப்பு பெற வரும் நபர்களிடம், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் சிலர், தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாகவும், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது .ஆகவே ,மதுரை மின்வாரிய தலைமை பொறியாளர் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டு, அந்த அலுவலகத்தில் தவறு செய்யும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.