Home செய்திகள் வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை. 4 பேருக்கு குண்டாஸ்.

வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை. 4 பேருக்கு குண்டாஸ்.

by mohan

வேலூர் அடுத்த காட்பாடி அருகே ஒரு திரையரங்கில் கடந்த மாதம் 17-ம் தேதி விடியற்காலை 1 மணியளவில் வேலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் தனது ஆண் நண்பருடன் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது அங்கு இருந்த ஷேர் ஆட்டோவில் வேலூருக்கு பயணித்தபோது மறைவான இடத்திற்கு ஆட்டோவை ஓட்டி சென்று கத்தியை காட்டி மிரட்டி பெண் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை செய்தது.அந்த வடமாநிலபெண் மருத்துவர் ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வேலூர்சத்துவாச்சாரியை சேர்ந்த பரத், பார்த்தீபன், மணிகண்டன், சந்தோஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் பரிந்துரையின்படி நேற்று 15-ம் தேதி வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி 4 பேரையும் குண்டாசில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!