14
வேலூரில் முக்கியமான வியபார தெருக்களில் லாங்கு பஜார், மெயின்பஜாரின் நடைபாதை, சாலைகளை ஆக்கிரமித்து பூ, பழக்கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடஞ்சலாக இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதனை அகற்ற அவர் உத்தரவிட்டார்.வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணா உத்தரவுப்படி, டிஎஸ்பி சுந்தரமூர்த்தி ஆலோசனைப்படி வேலூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் மேற்பார்வையில் இன்று 11-ம் தேதி லாங்குபஜாரில் ஆக்கிரமித்து இருந்த பழக்கடை, பூக்கடைகளை போக்குவரத்து காவலர்கள் அகற்றினர்.
You must be logged in to post a comment.