திருமங்கலம் அருகே தோப்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலியானார்.மோதிய வேகத்தில் ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்டின்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை பசுமலை ஜோன்ஸ்புரம் நான்காவது தெருவைச் சேர்ந்த பிரெட்ரிக் சாமுவேல் இவரது மனைவி நான்சி லெனிட்டா ராணி 34 மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை பசுமலையில் இருந்து திருமங்கலம் – திண்டுக்கல் நான்குவழிச் சாலை வழியாக நாகமலை புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இவர் தோப்பூர் 100 அடி கொடிக்கம்பத்தின் அருகே சாலையை கடக்க முயன்ற போது திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற டாட்டா சுமோ கார் மோதிய விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆசிரியை நான்சி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய வேகத்தில் நிலை தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் தைச் சேர்ந்த பாலாஜி 35 கார்த்திகா 30 ஒன்றரை வயது குழந்தை 3 பேர் பலத்த காயமடைந்தனர் சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து காரை நிமிர்த்தி உள்ளே காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முதற்கட்ட சிகிச்சைக்காக மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேல் சிகிச்சைக்காக மீண்டும் அவர்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு இறந்த ஆசிரியை உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற வாழ்க்கையை ஜீப் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.