மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் வி சினிமாஸ் திரையரங்கம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர். சிறப்பு மருத்துவர்கள் செந்தில்நாதன், சுதிர் ,வசுமதி ஆனந்த துரை, உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்கள் சிறப்பான சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர். காது மூக்கு தொண்டை நிபுணர் நித்தின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் நிபுணர் கௌதம் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் உமா ஆறுமுகம் ஒருங்கிணைத்தார். இதில் சிறப்பு அறுவை சிகிச்சை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், காப்பீட்டு அடையாள அட்டையின் மூலம் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் முள்ளிப்பள்ளம், தென்கரை மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இது குறித்து மருத்துவர் செந்தில் நாதன் கூறும்போது கிராமப்புற மக்கள் பயன்பெற வேண்டும் என்ற பொதுநல நோக்கில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிறுவனர் எம் வி எம் முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் இங்கே சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. தொடர்ந்து மாதந்தோறும் எட்டாம் தேதி சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெறும் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன் பெற கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.