பெட்ரோல் டீஸல் விலையேற்றம் அனைத்து தரப்பு மக்களை பாதிப்பு அடைய செய்கிறது.மத்திய அரசு இதனை குறைத்து பொதுமக்களுடைய சிரமத்தை குறைக்க கூடிய நிலையை மத்திய அரசு உறுதியாக ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக தற்போது போரின் அடிப்படையிலே இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.இலங்கை பொருளாதார வீழ்ச்சி குறித்து?மத்திய அரசைப் பொறுத்த வரையிலே மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழருடைய சேவைகளை தமிழகத்தினுடைய கோரிக்கைகளை படிப்படியாக தமிழக மக்களுடைய தேவைக்கு ஏற்றவாறு உறுதியாக பூர்த்தி செய்யும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.இலங்கை பொருளாதார வீழ்ச்சி குறித்து?இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அவசரகால பல்வேறு பிரச்சினைகளுக்கு சேவைகளுக்கு உறுதி எடுத்து அந்த தேவைக்கேற்றவாறு அவர்களுக்கு உதவி செய்த முதல் அரசு இந்திய அரசாகதான் இருக்க முடியும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து.டெல்டா, இராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்ல பெரும் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒட்டுமொத்தமாக இந்திய மீனவர்கள் மீனவர்கள் தாக்கப்படுவது அச்சுறுத்த படுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.பல நேரங்களில் இது தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்கிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய ஒரு உறுதியான நிலையை மத்திய வெளியுறவுத்துறை எடுக்க வேண்டும் இலங்கை அரசோடு உறுதியோடு பேசி மீனவர்கள் அச்சமின்றி கடந்து சென்று தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என G.K. வாசன் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.