மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து.-உஷாராணி தம்பதிகள். இவர்களுக்கு தீக்ஷித் சரண் (வயது 11), ஹர்ஷித் சரண் (வயது-6) என இரு மகன்கள் உள்ளனர்.தீக்க்ஷித், ஹர்சித் சரண் சகோதரர்கள் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு. மற்றும் 1ம் வகுப்பு படித்து வருகின்றனர்.கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால் கிடைத்த நேரத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.இதனையடுத்து 10 வயதான மூத்த மகன் தீக்ஷித் சரண் 48 ஆசிய நாடுகளில் பெயரை 16 வினாடிகளில் சொல்லி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.இதற்கு முன்பாக ஹரியானாவை சேர்ந்த ஒரு மாணவர் 18 நொடிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் அதை முறியடித்து தீக்ஷித் சரண் சாதனை படைத்துள்ளார்.அதே போல் இவரது சகோதரர் ஐந்து வயதான ஹர்ஷித் சரண் அதே சாதனையை 17.53 நொடிகளில் சொல்லி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.இந்த சாதனையைகேரளாவைச் சேர்ந்த சிறுமி 20 விநாடிகளில் சொல்லி சாதனை நிகழ்த்தியுள்ளார்.அதனை முறியடித்து தற்போது ஹர்ஷித் சரன் சாதனை படைத்துள்ளார்.இதைத்தொடர்ந்து தமிழில் புதிய உலக சாதனை படைக்க இருப்பதாக தமிழக முதல்வரை நேரில் சென்று வாழ்த்து பெற வேண்டும் என்று நோக்கத்துடன் மீண்டும் தமிழில் சாதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.திக்க்ஷித் சரண்லிம்கா புக் ஆப் ரெக்கார்டு சாதனை மாணவர்ஹர்சித் சரண்லிம்கா புக் ஆப் ரெக்கார்டு சாதனை மாணவர் தெரிவித்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.