தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.3.83 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்த மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் பேரில் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த 766 நபர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு உதவி தொகையாக ரூ.3.83 கோடி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டுத் தொகை பெற www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் (what”s new) “வாட்ஸ் நியூ’’பகுதியில் Ex-Gratia for Covid-19 என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித்தொகை பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.