வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சீரமைக்கப்பட்டு வந்த அறுவை சிகிச்சை அரங்கத்தை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கி பேசினார். தென்காசி மாவட்டம் வடகரை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மறுசீரமைக்கப்பட்டு வந்தது. இதனை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளருமான மரு. ஜெஸ்லின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்திற்கு வந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தினார். கடந்த 26.03.22 அன்று வடகரையில் ஒரே நாளில் நான்கு குழந்தைகள் சுகப் பிரசவத்தின் மூலம் பிறந்ததை பாராட்டி அந்த தாய்மார்களுக்கு ஒன்றிய அரசின் JSY (ஜனனி சுரக்ஷா யோஜனா) திட்டத்தின் கீழ் உள்ள பணப்பலன்களுக்கான காசோலையை வழங்கினார்.
மேலும் குடும்பநல அறுவை சிகிச்சைகள் மற்றும் சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். இதில் வடகரை வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் (DPHwing) மரு. முகமது இப்ராஹிம், மகப்பேறு சிறப்பு மருத்துவர் சங்கரி, பொறுப்பு மருத்துவ அலுவலர் விஷால், மரு.செண்பகா, சித்த மருத்துவர், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.