14
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்பை கைவிடக் கோரியும், அணையின் நீர்மட்டத்தை.152 அடியாக உயர்த்த கோரியும் ,கேரள அரசு தங்களது எதிர்ப்பை கைவிடக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க நிர்வாகி தவமணி தலைமை வகித்தார். சுந்தரம், பரமசிவம் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாவட்டச் செயலாளர் சந்தனம் ,ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சேது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.