8
வேலூர் கேரளா சமாஜத்தில் வேலூர் ம.நாராயணன் எழுதிய அன்றும் இன்றும், வேலூர் பி.ராதாகிருஷ்ணன் எழுதிய வாழ்க்கை பதிவுகள், பூங்கொத்து ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.வேலூர் காட்பாடிசன்பீம் பள்ளி தாளாளர் அரிகோபாலன், தலைமை பொறியாளர் ரங்கநாதன், கவிஞர் இலட்சுமிபதி,கவிஞர் பாரிதாசன், கவிஞர் பெர்னாட்ஷா, கேரள சமாஜ் செயலாளர் சி.பி.பிரபாகரன், பொருளாளர் சேதுமாதவன், மற்றும் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நன்றியுரையை நாடக சிற்பி வேலூர் பி.ராதாகிருஷ்ணன் கூறினார். கவிஞர் சாரதாதிருமலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
You must be logged in to post a comment.