7
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாம்பன் நகரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சன்மதி தலைமையில் 4 மருத்துவர்களும் 13 செவிலியர் உள்பட 17 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். கண்சிகிட்சை முகாமிற்கான ஏற்பாடுகளை சந்தனகுமார் செய்திருந்தார்.சிறப்பு கண்சிகிச்சை முகாமில் மொத்தம் 267 பேர் கலந்து கொண்டனர். கண்புரை நோய் ஏற்பட்டுள்ள 69 பேருக்கு வேலம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.