காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்மதுரை விமான நிலையத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன் பேட்டி.|உலகிலேயே சில நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசியை செலுத்த ஆரம்பித்துள்ளன.இந்தியாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கொரான தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை புரிந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.கொரானா குறைந்ததால் தடுப்பூசி போட வேண்டாம் என்பதில்லாமல்தடுப்பூசி போட்டதால் தான் கொரானா இல்லை என்ற நிலை ஏற்பட்டது.தடுப்பூசி போட்டதால் தான் எத்தனை அலை வந்தாலும் கொரானாவை கட்டுப்படுத்த முடியும்.வரும் 27ம் தேதி முதல் புதுவைக்கு விமான சேவை தொடங்க உள்ளது.அரசுப்பள்ளிகள் தரம் உயர்ந்து எல்லோரும் அரசு பள்ளிகளை நோக்கி வர வேண்டும்.அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த வேண்டும்.தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்கள் நிறைய செயல்படுத்தப்படுவதை போல புதுச்சேரியில் செய்யப்படுமா என்ற கேள்விக்கு,*புதுச்சேரியில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஒரு அரசு மாதிரி இன்னொரு அரசு இருக்க முடியாது. என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.