மதுரைநகரப் பகுதிகளில் காற்று மாசு ஏற்படுவதற்கு வாகனங்கள் வெளியேற்றும் புகை முக்கிய காரணமாக இருக்கிறது .வாகனங்கள் வெளியிடும் புகை கார்பன் ஆக்சைடு , மோனாக்சைடு , நைட்ரஜன் ஹைட்ரோகார்பன் , சல்பர் டை ஆக்சைடு போன்றவை மனிதர்களின் சுவாசத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றன .மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகவும் இருக்கிறது . காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .இதன் ஒரு பகுதியாக வாரியத்தின் அனைத்துப் பணியாளர்களும் வாரம் ஒரு நாள் புதன்கிழமை மாசற்ற அலுவலக வாரம்- பயண நாள் என்பதை கடைப்பிடித்து வருகின்றனர் .இதனால் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வாரியத்தின் பணியாளர்கள் அனைவரும் தங்களது மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து , பொதுப் போக்குவரத்து , சைக்கிள் அல்லது மின் சைக்கிள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அலுவலகம் கின்றனர் .இதனைத் தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது இல்லத்தில் இருந்து சுமார் 3.1/2 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் மதுரை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் வருகை தந்தார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.