நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின விழா நடந்தது.இதில் பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மகளிர் தின விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்தினர். இப்போட்டிகளை வழக்கறிஞர் பிரபாகரன் துவங்கி வைத்தார். இப்போட்டிகளில் திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 44 பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளும் எட்டு கல்லூரிகளில் இருந்து பன்னிரண்டு மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பிஸ்மிதா,சார்பு நீதிபதிசட்ட பணிக்குழு செயலாளர் உடனிருந்தார். நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா வாழ்த்துரை ஆற்றினார். நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். முன்னதாக அரசு அருங்காட்சியகமும் சி சிஸ்டம் அறக்கட்டளையும் இணைந்து கோலப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை போட்டி, பாட்டுப் போட்டி, மற்றும் மெஹந்தி வரைதல் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் ஸ்ரீ குட்டி ,ஜோசப் கேத்தரின் ,வர்ஷினி பிரபா, கவிதைப் போட்டியில் பானுமதி, சுகிதா, கார்த்திகை செல்வி, பாட்டுப் போட்டி யில் ஜெயந்தி, பிரசன்ன ஜெகதா, பொன்னம்மாள், கோலப் போட்டியில் கார்த்திகை செல்வி, துர்கா இளவரசி, ராஜேஸ்வரி, மெஹந்தி போட்டியில் புவனேஸ்வரி, வேல்மயில் அகிலா, இந்துமதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இப்போட்டிகளில் பொதிகை தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே ராஜேந்திரன், கலையாசிரியர் சொர்ணம் , எஸ் . எம். ஃபேஷன் சரிதா முருகன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். மேலும் நெல்லை அருங்காட்சியகத்தில் எப்சிபா அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய மன்னுயிர் காப்போம் ஓவியப் போட்டி மற்றும் மக்கள் நல்வாழ்வின் பெண்களின் பங்கு பேச்சு போட்டி ஆகிய போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் எப்சிபா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஜெயராஜ் கலந்து கொண்டார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.