Home செய்திகள் மதுரையில், போலீஸாருக்கு பணி நியமன உத்தரவு: போலீஸ் எஸ்.பி.

மதுரையில், போலீஸாருக்கு பணி நியமன உத்தரவு: போலீஸ் எஸ்.பி.

by mohan

மதுரையில்,புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.பாஸ்கரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில்,மதுரை மாவட்டத்தைச்சேர்ந்த 202 பெண்கள், 49 ஆண்கள் மொத்தம் 251 நபர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வான, 251 நபர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து, தமிழக அரசு வழங்கிய பணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.மேலும், அவர்களுக்குதமிழக காவல்துறையின்பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!