8
தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை காளவாசல் அருகில் பாத்திமா நகரில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இதில் செயலாளரும் நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி, நடிகை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையிலும் அரசு பொது சுகாதார நிலையத்தில் அரசு அலுவலர்கள் சத்யா, நிஷா, சாந்தி, தமிழ்ச்செல்வி இணைந்து தமிழ் சினிமா நடிகர்கள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயலட்சுமி, ஷமிக்ஷா, ரோஹினா, சுபிலிஷா, ஸ்ரீஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சங்க அலுவலக மேலாளர் பாலா, செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.