11
மதுரை கேகே நகர் வக்பு வாரிய கல்லூரி அருகே ஒருவர் இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென்று ஒருவர் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் அடிக்கவே நிலை தடுமாறி கீழே விழுந்தார் இவருக்கு தலை மற்றும் நெற்றிப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது ஆபத்தான நிலையில் இருந்த நபரை இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 அவசர கால ஊர்தி தகவல் தெரிவித்தனர் எனினும் வாகனம் வர தாமதமானதால் உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை ஒரு ஆட்டோவில் தூக்கிக்கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.