9
மதுரையிலிருந்து- சோழவந்தான் செல்லும் சாலையில், சமயநல்லூர் பழைய கேட் அருகே மினி லாரிகள் மூலம், பழைய கழிவுகளை தொடர்ந்து கொட்டப்படுவதால், சாலைகளில் துர்நாற்றம் விசுவதுடன், சிலர் குப்பைகளில் தீ வைத்து விடுவதால், இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் பயணிப்போர், பெரிய இன்னலுக்கு ஆளாகின்றனர்.இது குறித்து, சமயநல்லூர் ஊராட்சிமன்ற நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுத்து, சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.