மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் கணேசன், திமுக 58 வது வார்டு வட்டச்செயலாளர். இவரது மகன் சரத்குமார்(29), அவனியாபுரம் கிழக்குப் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அய்யனார்(25), அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர். சரத்குமாருக்கும் அய்யனாருக்கும் இடையே சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து கடந்த இரண்டு நாட்களாக பிரச்சனை நடந்துள்ளது.இது சம்பந்தமாக நேற்று மதியம் அய்யனார் அவருடைய நண்பர்களுடன் சென்று சரத்குமாரின் திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் அதிகமானதால் அருகில் இருந்த திமுக அதிமுகவினர் கூடி பேசி இருவரையும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இருந்தாலும் பிரச்சனையை விட மனமில்லாத அய்யனார் நேற்று இரவு பத்து முப்பது மணி அளவில் தன் நண்பர்களுடன் மீண்டும் திமுக கட்சி அலுவலகத்திற்கு வந்து சரத்குமாரிடம் சண்டையிட்டு உள்ளனர்.சண்டை முற்றியதில் அய்யனார் தான் மறைத்திருந்த கத்தியை எடுத்து சரத்குமாரை தாக்க முயன்றுள்ளார் அப்போது சுதாரித்துக்கொண்ட சரத்குமார் அங்கிருந்து ஓடவே அய்யனார் தன் நண்பர்களுடன் சரத்குமாரை விரட்டி உள்ளார். ஓடிச்சென்று வீட்டுக்கு சென்ற சரத்குமார் . வீட்டின் வாசல் கதவை பூட்டிவிட்டு உள்ளே செல்வதற்குள் அவரை துரத்தி வந்த ஐயனார் கதவு இடைவேளிக்கு இடையே கத்தியை விட்டு சரத்குமாரின் மீது தாக்கியுள்ளார் இதில் சரத்குமாரின் வயிற்றில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஐயனார் மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கீரைத்துறை போலீசார் அய்யனார் மற்றும் அவருடைய நண்பர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இன்னும் ஒரு வாரத்திற்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளரை அதிமுக தொழில்நுட்ப பிரிவை சார்ந்தவர்கள் தாக்கியுள்ள சம்பவம் சிந்தாமணிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.