தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணி மாறுதல் பெற்ற மருத்துவர்களுக்கும், பதவி உயர்வு பெற்ற மருத்துவர்களுக்கும் பிரிவு உபச்சார விழா மற்றும் பாராட்டு விழா 09.02.2022 புதன் கிழமை நடைபெற்றது. விழாவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் திருப்பதி அனைவரையும் வரவேற்றார். முன்னாள் இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் தங்கராஜ் தலைமை தாங்கி அனைத்து மருத்துவர்களையும் வாழ்த்தினார்.
முன்னாள் பொறுப்பு இணை இயக்குனர் மருத்துவர் முத்தையா,முன்னாள் துணை இயக்குனர் குடும்பநலம் மருத்துவர் முகைதீன் அகமது, தென்காசி அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மயக்கவியல் நிபுணர் மருத்துவர் ராமகிருஷ்ணன், மீரான் மருத்துவமனை மருத்துவர் அஜிஸ், தென்காசி அரசு டாக்டர்கள் சங்க செயலாளர்கள் மருத்துவர் செந்தில் சேகர்(DMS wing), மருத்துவர் முகம்மது இப்ராஹிம் (DPH wing), தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக பணியாளர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள்,செவிலியர்கள், செவிலியர் உதவியாளர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புனர்கள், மகப்பேறு உதவியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அறுவை அரங்கு உதவியாளர்கள், ஐ சி டி சி, ஏ ஆர் டி பணியாளர்கள், நுண்ணுயிரியல் ஆய்வக பணியாளர்கள், காப்பீட்டு திட்ட பணியாளர்கள், ஸ்மித் பணியாளர்கள் மற்றும் தென்காசி அரசு மருத்துவமனை சார்ந்த அனைத்து பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த உறைவிட மருத்துவர் அகத்தியன் கோவில்பட்டிக்கும், மகப்பேறு முதன்மை மருத்துவர் மருத்துவர் அனிதா பாலின் கடையநல்லூருக்கும் பணி மாறுதலில் சென்றுள்ளனர். மருத்துவர் ஜெஸ்லின் ரெகுலர் மருத்துவமனை கண்காணிப்பாளராக பணி மாறுதல் பெற்றுள்ளார். கடையநல்லூரிலிருந்து மருத்துவர் கிருஷ்ணன் தென்காசிக்கு பணிமாறுதல் பெற்றுள்ளார். மருத்துவர் அமுதா அறுவை சிகிச்சைத் துறை தலைமை மருத்துவராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார். மருத்துவர் புனிதவதி மகப்பேறு தலைமை மருத்துவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மருத்துவர் ராஜேஷ் உறைவிட மருத்துவர் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். மருத்துவமனை கருத்தரங்கில் நடந்த இந்த விழாவில் தென்காசி மாவட்ட அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த நான்கு வருடங்களாக தென்காசி மருத்துவமனையில் உறைவிட மருத்துவராக பணி புரிந்த மருத்துவர் அகத்தியன், மகப்பேறு தலைமை மருத்துவராக பணி புரிந்த மருத்துவர் அனிதா பாலின் ஆகியோருக்கு தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பதவி உயர்வு பெற்ற மருத்துவர் ராஜேஷ், மருத்துவர் புனிதவதி, மருத்துவர் அமுதா, பணி மாறுதலில் தென்காசி மருத்துவமனையில் பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் கிருஷ்ணன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மருத்துவர்களும் அனைத்து பணியாளர்களும் வரவேற்றனர். பொறுப்பு மருத்துவமனை கண்காணிப்பாளராக கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர் ஜெஸ்லின், ரெகுலர் மருத்துவமனை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். அவரை அனைத்து மூத்த மருத்துவர்களும், அரசு டாக்டர்கள் சங்க தலைவர்களும், தென்காசி மாவட்ட மருத்துவர்களும் வாழ்த்தி வரவேற்றனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பதவி உயர்வு விழாவின் போது தென்காசி மருத்துவமனையில் பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர்களை வாழ்த்தி வரவேற்றதுடன் நல்ல ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் விருந்து அளிக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமுமம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.