Home செய்திகள் கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், விழிப்புணர்வு முகாம்:

கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், விழிப்புணர்வு முகாம்:

by mohan

மதுரை சரக காவல் துணை தலைவர் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்:மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பொன்னி, அறிவுறுத்தலின் பேரில் ,மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம், செக்காணூரனி கள்ளர் அரசு மேல் நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இம்முகாமில், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர்பொன்னி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வீ.பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்தும்,பெண் கல்வி பேணுதல், சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும், பெண்களுக்கு சமூகத்தில் உள்ள பொறுப்பு குறித்தும், சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு குறித்தும்,பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், எந்தெந்த வகையில் தடுக்கலாம் என்பது குறித்தும்பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்தும்,பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் எந்த வகையில் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பது குறித்தும்,பெண் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் அதில் பெற்றோர்களின் பொறுப்பு குறித்தும்,குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்தும்,பெண் குழந்தைகளுடைய கவனம் எந்தெந்த வகையில் திசை திருப்பப்படுகிறது என்பது குறித்தும், அதனால் ,ஏற்படும் பாதிப்பு குறித்தும், உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசு கொலை அவ்வப்போது நிகழ்கின்றன என்றும், பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத பெற்றோர்கள் தங்கள் பெண் சிசுக்களை தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கலாம் என்பது குறித்தும்,பாலியல் குற்றங்கள் நிகழும்போது அதனை தடுப்பது குறித்தும் மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும், இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சந்திரமௌலி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, நல்லு காவல் துணைக் கண்காணிப்பாளர் உசிலம்பட்டி உட்கோட்டம, காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் குழு மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!