மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு நம்பர் 75 மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் மாலை 6 மணிக்கு மேல் சாலையில் வருவதற்கே பயமாக இருப்பதாகவும் இது சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைந்து விடுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர் மேலும் காவல் துறையினர் பொருத்தப்பட்டுள்ள இப்பகுதியில் அதிக அளவு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன இதில் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிட வாய்ப்புகள் உள்ளது எனவும் இதனால் அவர்களுக்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அமைந்து விடுவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் உள்ள அனைத்து தெரு எரியும் வகையில் பழுது நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி மின்சார பிரிவு அதிகாரிகள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.