10
மதுரை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பேரையூர் கல்லுப்பட்டி மற்றும் ஏழுமலை ஆகிய பேரூராட்சி களுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு பேரையூர் ஜம்ஜம் மஹாலில் நடைபெற்றது. தேர்தல் காலத்தில் வாக்குப்பதிவு நடைமுறை மீது பின்பற்றவேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு ஆலோசனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லுப்பட்டி செயல் அலுவலர் முகமது ரபிக் ,பேரையூர் செயல் அலுவலர் ஜெயா தாரா, எழுமலை செயல் அலுவலர் சிவக்குமார் ,வாக்குப்பதிவு தலைமை அலுவலர் செல்வராஜ், மணிகண்டன், மாரிச்செல்வம், HB ராம்குமார் , பேரையூர் இளநிலை உதவியாளர் ஆர் பிச்சைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.