8
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (35).பாலாஜி ஆம்பூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நிலசர்வேயராக பணியாற்றி வருகிறார்.இவர் ஒருவரின் நிலத்தை அளந்து பட்டா, மாற்றி தர ரூ8 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கிய போது வேலூர் விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர்.பின்பு சேண்பாக்கம் கழனிக்காட்டு தெருவில் உள்ள பாலாஜி வீட்டை சோதனை செய்தபோது கணக்கில் வராத 22 லட்சத்து 84 ஆயிரத்து 650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் வீட்டிலிருந்து வங்கி தொடர்பான ஆவணங்கள், பத்திரங்கள், நிதிசார்ந்த பத்திரங்கள், பங்கு வர்த்தகம் தொடர்பான பத்திரங்கள் உள்ளிட்ட பலகைப்பற்றப்பட்டன.
You must be logged in to post a comment.